Pages

Search This Blog

Tuesday, December 21, 2010

இறைவனிடம் கேட்டேன்.

இறைவனிடம் கேட்டேன்.

நான் இறைவனிடம் சோதனைகளை வெல்லக்கூடிய வலிமையை கேட்டேன்.
அவன் எனக்கு சோதனைகளை கொடுத்தான்.

சிக்கல்களை தீர்க்க வல்ல ஆற்றலை கேட்டேன்.
எனது ஆற்றலை வளர்க்க சிக்கல்களை கொடுத்தான்.

பயத்தை வெல்லக்கூடிய தைரியத்தை கேட்டேன்.
அவன் பயம் மிகுந்த சூழ்நிலையை கொடுத்தான்.

அன்புக்காக நான் ஏங்கித்தவித்தேன்.
அன்பு காட்ட பாவப்பட்ட மனிதர்களை என்னுடன் அனுப்பி வைத்தான்.

இறைவனிடம் செல்வம் கேட்டேன்.
நான் கடுமையாக உழைக்க அவன் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தான்.

நான் கேட்ட அனைத்தும் அவன் எனக்கு தர வில்லை,
அதே சமயம் எனக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் அவன் எனக்கு தந்தான்.

எப்போதும் நான் கேட்பதை அப்படியே இறைவன் நம் கையில் தூக்கித் தர மாட்டன் அனால் நாம் விரும்புவதை அடையக் கூடிய பாதையை காட்டுவான்.

No comments: